வியாழன், 21 ஜனவரி, 2016

மட்டு.ஓந்தாச்சிமடத்தில் விபத்து –மயிரழையில் உயிர் தப்பிய இருவர்


(கல்லாறு சிறி)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் கார் ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் அதில் பயணம் செய்த இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.


இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் குறித்த காரில் பயணம் செய்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளதானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி இருந்து கல்முனை நோக்க வேகமாக வந்த காரின் முன் சக்கரம் வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினை மோதி விபத்துக்குள்ளானது.

எனினும் கார் தண்ணீருக்குள் பாயவில்லையெனவும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும் சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate