புதன், 27 ஜனவரி, 2016

பட்டிருப்பு தொகுதியினை சகல துறைகளிலும் வளம்பெறச் செய்து மக்களின் நல்வாழ்க்கைக்கு வழிகோலுவேன் .- முன்னாள் பிரதியமைச்சரும் அமைச்சின் ஆலோசகருமான .சோமசுந்தரம் கணேசமூர்த்தி

முன்னாள் பிரதியமைச்சரும் , தற்போதைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்  விசேட ஆலோசகரும் , பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய .சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் கடந்த வாரம் பட்டிருப்பு தொகுதியின் பல பிரதேசங்களிற்கு விஜயம் மேற்கொண்டு காணப்படும் குறைபாடுகளை மக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.



களுதாவளை , மகிழூர் , தேற்றாத்தீவு, பெரியாகல்லாறு , செட்டிபாளையம் , கிராங்குளம் , எருவில் ,பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி , துறைநீலாவணை ஆகிய பிரதேச மக்களினால் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களிற்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டிருந்ததுடன் , மக்கள் தங்களுடைய தேவைகளை நேரடியாக தெரியப்படுத்திருந்தனர் .


சோ.கணேசமூர்த்தி அவர்கள் உரையாற்றுகையில் எமது பிரதேசங்கள் சகல வழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது எனவே எமது பிரதேசங்களின் வளர்ச்சி எமது கரங்களிலே  தங்கியிருக்கின்றது. ஆகவே அனைவரும் தங்களுடைய அரசியல் விருப்பு வெறுப்புக்களை புறம்தள்ளி தங்களுடைய தானங்களை விடுத்து பிரதேச முன்னேற்றத்திற்காய் உளைக்க என்னுடன் கைகோருங்கள், மீண்டுமொரு தேர்தல் வரும் பட்சத்தில் உங்களுக்கு விருப்பமான நிலையங்களுக்கு நீங்கள் தாராளமாக செல்லலாம் எனக் கூறியிருந்தார் , அத்துடன்  எமது தமிழ் சமூகத்தினை கல்வியில் பிரகாசிக்க செய்ய என்னால் ஆன  பல முயற்சிகளை எடுத்துள்ளேன் அவை அனைத்தும் வெற்றியளித்துள்ளது , வெகுவிரைவில் அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன, மற்றும் இளைஞ்சர் யுவதிகளிற்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக தொழிற்பேட்டைகளை பட்டிருப்புதொகுதியில் அமைப்பது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் கலந்துரையாடி இருக்கின்றேன், வெகு விரைவில் எமது பட்டிருப்பு தொகுதியில் தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும் எனக்கூறியிருந்தார் .

மேலும் தற்போது அமைக்கப்பட்டிருக்கும்  தேசிய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான தமிழர்களிற்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கமும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க   அவர்களும் மிக  முனைப்பாக செயற்படுவதாகவும் தெரிவித்திருந்தார் . எதிர்வரும் காலங்களில் முக்கிய பல அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாகவும் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்க இருப்பதாகவும் கூறியிருந்தார் .  

பிரதேசங்களில் நடைபெற்ற நிகல்வுகளில் கிராமத்தின் தலைவர்கள், சங்கங்கள் , களகங்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் தங்கள் பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரும்படியும் கூறியிருந்தனர் .  சில பிரச்சினைகளிற்கான தீர்வுகள் தொலைபேசி மூலம்‌ தீர்க்கப்பட்டிருந்தது. துறைநீலாவணை வைத்தியசாலைக்கு நோயாளிகளுக்கான புதிய கட்டில்கள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது அத்துடன் பல பிரதேசங்களில். சோ.கணேசமூர்த்தி அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டவறே எந்தவித மேலதிகமான சேவைகளையும் பெற்றிராத நியலியில்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624940

Translate