(லியோன்)
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 இல் தகாபுல்
பிரிவினால் பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட சிறந்த மாணவர்களை கௌரவிக்கும்
நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு ஏறாவூர் மத்தி கல்வி வலயத்தில் பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட சிறந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு
வெற்றி கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04இன் முகாமையாளர்
எஸ் .வேனுகரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது
.
மட்டக்களப்பு மத்தி வலய பிரிவின் ஏறாவூர் பசீர்
சேகுதாவுத் வித்தியாலயம் மற்றும் ஏறாவூர் டாக்டர்
அகமெட் பாரீத் வித்தியாலய மாணவர்களில் தெரிவு செய்யப்பட சிறந்த மாணவர்களை கௌரவித்து வெற்றி
கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை விற்பனை மேற்பார்வையாளர்
வி . மகேஷ் , செலிங்கோ லைப் கிளை உத்தியோகத்தர் திருமதி .ஆர் , நந்தினி மற்றும் பாடசாலை
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை
04 இன் தகாபுல் பிரிவினை விரிவுபடுத்தும் முகமாக முஸ்லிம்களுக்கான வேலை வாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன .
இது தொடர்பான விபரங்களை 077 035 95 32, 075 278 95 68 ஆகிய தொலை பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் .


0 facebook-blogger:
கருத்துரையிடுக