வியாழன், 14 ஜனவரி, 2016

இன ஐக்கியத்தினையும் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையினையும் கட்டியெளுப்பும் பொங்கல் விழா

இன ஐக்கியத்தினையும் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையினையும் கட்டியெளுப்பும் வகையிலான மாபெரும் தைப்பொங்கல் விழா இன்று மட்டக்க்களப்பில் நடைபெற்றது.

கல்வி அமைச்சு மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சு ஆகியவற்றின்  அனுசரணையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று (14) காலை நடைபெற்றது.

காத்தான்குடி அன் நசார் வித்தியாலய இஸ்லாமிய மாணவர்களும் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியால மாணவிகளும் இணைந்து இத்தைப்பொங்கல் விழாவினை சிறபித்திருந்தனர்.

மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இத் தைப்பொங்கல் விழாவில் தேசிய கலந்துரையாடல் அமைச்சின் மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் நல்லரெட்னம் துஜோகாந்த் , பிரதிக்கல்விப் பணிப்பாளர் கனகேஸ்வரி, விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் மற்றும் அன் நசார் வித்தியாலய அதிபர் அல்ஹச் எம்.எ. அல்லா பிச்சை ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது இரண்டு இன மாணவர்களும் ஒன்றிணைந்து பொங்கல் பொங்கியதுடன் கலை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.


ஒரு இனம் மற்றுமொரு இனத்தின் கலை கலாசார பண்பாடுகளைஅறிந்து கொள்ளவேண்டும் என்னும் தொனிப்பொருளினைக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சிந்தனையின் கீழ் பாடசாலை மட்டத்தில் இந்நிகழ்வு முதல் தடைவையாக  ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate