வியாழன், 21 ஜனவரி, 2016

கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி பிரதேச கொலை வழக்கு விசாரணை நீடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த அழையப்போடி இராசதுரை என்பரை அடித்துக் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 03.02.2016 வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணக்கவாசர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
பனிச்சேனை வாதக்கல்மடு பகுதியிலுள்ள 40 ஏக்கர் காணி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2015.12.08 அன்று அழையப்போடி இராசதுரை பொல்லாலும், கையாலும், காலாலும் அடித்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடார்த்தி வந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் சுப்பிரமணியம் செல்வராசா, பற்குணராசா பேரின்பராசா, உதயக்குமார் ரவிச்சந்திரன், அலையப்போடி கந்தசாமி, கந்தசாமி திசேத்திரன், ஜீவரட்ணம் சாந்தகுமார் ஆகியயோரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்த போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate