புதன், 13 ஜனவரி, 2016

மாற்றுத்திறனாளிகளின் 14 அமைப்புகள் இயங்குகின்றன

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின்  அமைப்புகள் 14 இயங்கி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை அதிகாரி எஸ்.அருள்மொழி தெரிவித்தார். வாழ்வாதார உதவிகள் வழங்கும் நடவடிக்கை போரதீவுப்பற்று பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார். 

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இவ்வாறு இயங்கும் அமைப்புகளில்; 09 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுயமாக முன்னேற்றமடைந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துள்ளனர். அதேபோல், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும்  பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வளர்ச்சியடைய வேண்டும். போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 120 மாற்றுத்திறனாளிகளுக்கு  மாதாந்த உதவித் தொகையாக தலா 3,000 ரூபாய் படி அரசாங்கம் வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624846

Translate