செவ்வாய், 26 ஜனவரி, 2016

பட்டிருப்புத்தொகுதியின் படுவாங்கரை பிரதேசங்களிற்கு முன்னாள் பிரதியமைச்சர் .சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசங்களான கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, காஞ்சிரங்குடா, கணேசபுரம், கொல்லநுலை, காட்டுவாசல், முனைக்காடு, மண்டூர் , பாலாச்சோலை , இரணமடு , காக்காச்சிவட்டை ,பழுகாமம் போன்ற பல பிரதேசங்களிற்கு முன்னாள் பிரதியமைச்சரும் , தற்போதைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்  விசேட ஆலோசகரும், பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் கடந்த வாரம் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார். அப்பிரதேசங்கள் சகல வழிகளிலும்  பின்தங்கிய நிலையில் காணப்படும் நிலையில் மக்கள் கவனிப்பாரற்று பல்வேறுபட்ட தேவைகளுடன் தங்களுடைய வாழ்க்கையினை கொண்டு செல்ல கஷ்டப்படுவதாகவும் , விசனம் தெரிவித்திருந்தனர். 

சில முக்கிய பிரச்சினைகளிற்கான தீர்வுகள் உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசிமூலம் கலந்துரையாடி தீர்வுகாணப்பட்டிருந்தது, பாலாச்சோலை கிராமத்திற்கான பேருந்து சேவையினை சீர்ப்படுத்தியமை, நீர்வளங்கல்  சேவையில் புறக்கணிக்கப்பட்டிருந்த காஞ்சிரங்குடா, இரணமடு பிரதேசங்களினை நீர்வளங்கல் வடிகாலமைப்ப்பிற்கு  பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் தொடர்பு கொண்டு அக்கிரமத்தினையும் இணைக்கச்செய்யப்பட்டிருந்தது, மண்டூர் பிரதான வீதி ,களுவாஞ்சிக்குடியிலிருந்தான பழுகாமமூடு  கொக்கட்டிச்சோலை செல்லும் பிரதான பாதை அமைப்பது சம்மந்தமாக உயர் அதிகாரிகளை நேரடியாக அளைத்து அதற்குரிய தீர்வும் காணப்பட்டிருந்தது. அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து அதற்குரிய தீர்வுகளை வெகுவிரைவில் பெற்றுத்தருவதாக முன்னாள் பிரதியமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.அத்துடன் தனக்கு தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களிற்கும் நன்றியினையும் தெரிவித்ததோடு தொடர்ந்து மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளையும் தீர்த்து வைப்பதாக தெரிவித்திருந்தார் . சோ. கணேசமூர்த்தி அவர்களின் விஜயத்தின் பொது மக்கள் அவரை மிகவும் ஆர்வமுடன் வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும். 


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate