வெள்ளி, 22 ஜனவரி, 2016

நாடு திரும்பிய மட்­டக்­க­ளப்பு ஊடகவியலாளர் கைது

அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து நாடு திரும்­பிய மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் புண்­ணி­ய­மூர்த்தி சசி­கரன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நேற்று முன் தினம் மாலை குறித்த ஊட­க­வி­ய­லாளர் நாடு திரும்­பிய போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து அவரை கைது செய்­த­தா­கவும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டங்­களை மீறி­யமை தொடர்­பி­லேயே அவரைக் கைதுச் செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,
 
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஹிக்­க­டுவை பகு­தியில் இருந்து சட்ட விரோ­த­மாக படகு மூலம் புண்­ணிய மூர்த்தி சசி­கரன் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சென்­றுள்ளார். இந் நிலை­யி­லேயே அவர் நேற்று முன் தினம் இலங்­கைக்கு திரும்­பி­யுள்ளார். இதன் போது விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­அ­ரிகள் புண்­ணி­ய­மூர்த்தி சசி­க­ரனை கைது செய்த நிலையில் அவரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். சட்ட விரோ­த­மாக சட்ட ரீதி­யி­லான துறை முகம் அல்­லாத ஒரு இடத்­தி­லி­ருந்து வெளி நாடொன்­றுக்கு பய­ணித்­தமை தொடர்பில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டங்­களை மீறினார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்யப்பட்ட சசிகரன் நேற்று மாலை நீர்கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624975

Translate