புதன், 27 ஜனவரி, 2016

பிள்ளையானுக்கு விளக்கமறியல் இருவாரங்களுக்கு நீடிப்பு

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில்  நத்தார் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரையும் எதிர்வரும் 10  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று புதன்கிழமை  காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா முன்னிலையில் நால்வரையும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதிப்மாஸ்டர், இரானுவ புலனாய்வு உத்தியோகத்தர் கலீல் மற்றும் கஜன் மாமா ஆகியோரே  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624953

Translate