வியாழன், 21 ஜனவரி, 2016

சர்வதேச மட்டத்தில் காரைதீவு மாணவி சிவசுப்பிரமணியம் திலோத்திகா சாதனை

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மட்ட போட்டியொன்றில் காரைதீவைச்சேர்ந்த மாணவி. செல்வி சிவவசுப்பிரமணியம் திலோத்திகா 3ஆம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற International UCMAS Abacus & Mental Arithmetic Competition – 2015 சர்வதேச போட்டியில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப் போட்டியானது கடந்த வருடம் 05.12.2015ம் திகதி இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றது.
இப் போட்டியில் காரைதீவிலிருந்து பங்குபற்றியிருந்த பொறியியலாளர் சிவசுப்பிரமணியம் மருத்துவர் ஜீவராணி ஆகியோரின் புதல்வி செல்வி.சி.திலோத்திகா 11000 மாணவர்களிடையே இடம்பெற்ற போட்டியில் மூன்றாமிடத்தினை பெற்று சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
a075d135-e8e2-4673-8d23-75af213c30b5
10e41355-5ae4-470d-a48b-a216f2714c95
f0f4bab7-b578-42d3-a6d7-efb04239fda6


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate