செவ்வாய், 26 ஜனவரி, 2016

கட்சி பேதம் இன்றி சகல முரண்பாடுகளையும் களைந்து எமது பிரதேசங்களை அபிவிருத்திப்பாதையில் மிளிரவைக்க அனைவரும் உளச்சுத்தியுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் – முன்னாள் பிரதியமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி.


முன்னாள் பிரதியமைச்சரும் இதற்போதையகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றியஅமைச்சின்  விசேட ஆலோசகரும்,  பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களிற்கு 24.01.1016 அன்று அவருடைய  பிறந்த மண்ணான கோயில்போரதீவு மக்களினால் மிக பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. விழாவில் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களினால் அவர் மண்ணிற்கு அளிக்கப்பட்ட சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டியதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர்  உரையாற்றுகையில் தேர்தல் காலத்தினை போல் முரண்பாட்டுடன் செயற்படாமல் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து உங்களுடைய பிரதேசத்தினதும் , மக்களினதும் தேவைகளை உணர்ந்து அவற்றினை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு அனைவரும் முன்வாருங்கள். எந்தவித பாகுபாடும் இன்றி என்னால் இயன்ற சகல உதவிகளையும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் எனக் கூறியிருந்தார். அத்துடன் விழாக்குழுத் தலைவரினால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறியிருந்தார் .பாடசாலையில் உள்ள வளப்பற்றாக்குறையினையும் பார்வையிட்டிருந்தார். அத்துடன் 2015ம் ஆண்டு பலகலைக்களகத்திற்கு தெரிவான மாணவர்களும் பாராட்டி  கௌரவிக்கப்பட்டிருந்தனர் .

நிகழ்வில் ஐக்கியதேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ,முன்னாள் பிரதியமைச்சரின்  செயலாளர் மற்றும் கோயில்போரதீவினைச்சேர்ந்த ஆலயங்களின் தலைவர்கள் , சங்கங்கள் , களகங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் அத்துடன்   பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு தங்களுடைய தேவைகளையும் முன்னாள் பிரதியமைச்சரிடம் தெரியப்படுத்தியிருந்தனர் . 

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate