வியாழன், 21 ஜனவரி, 2016

திருக்கோவிலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பாறை- திருக்கோவில் சுங்கமன் கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயலை பார்வையிடுவதற்கு நேற்று புதன்கிழமை இரவு சென்ற ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் - சுங்கமன் கிராமத்தை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate