மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பகுதியில் வசித்துவரும் பொது சுகாதார பரிசோதகரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று (30) நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றும் க.ஜெய்சங்கர் என்னபவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த மூன்று மாத காலமாக குறித்த உத்தியோகத்தர் கல்லடி பகுதியில் புதிதாக இடமாற்றம் பெற்று வந்ததனைத் தொடர்ந்து பிரதேசத்தில் உள்ள சில உணவகங்கள் மற்றும் நடைபாதை வியாபாரம் போன்றவற்றில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் வியாபாரத்தினை மேற்கொண்டுவந்தவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் 45 இற்கு மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 23 வழக்குகளில் தண்டப்பணம் விதிக்கப்பட்டதனைத் தொடர்ந்தே தனது நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறான விஷமதனமான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக குறித்த உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாது கடந்த 2014 ஆம் ஆண்டு தனக்கும் தனது கடமைக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக சுகாதார திணைக்களத்திற்கும் பொலிசாருக்கும் எழுத்து மூலமாக அறிவித்திருந்ததுடன் , போலிசிலும் தான் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டு இருந்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக