ஞாயிறு, 24 ஜனவரி, 2016

வந்தாறுமூலையில் முச்சக்கரவண்டி விபத்து 6 பேர் படுகாயம்


மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று உட்பட ஆறு பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகிச்சென்று, வீதியின் வலது புறமாகவுள்ள மதகு ஒன்றினுள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
  
இதில் முச்சக்கரவண்டிச் சாரதியான ச.மகாதேவன் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கே.பரதன், கே.யாழினி, கே.அனுஷ்கன், ஐ.ரஞ்ஜினி மற்றும் பீ.காருனி (வயது 01) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த ஆறு பேரும் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பொலிஸார் கூறினர்


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624842

Translate