மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை மற்றும் இறால்வளர்ப்பு பண்ணையிலும் கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவு கூரும் 29வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், எதிர்வரும் 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ‘மறந்தாலும் மண்ணும் இரையாகும்’எனும் தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக