பாடசாலை கல்வியின் மகிழ்ச்சிக்கான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்றைய தினம் அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் இரண்டாம் தர மாணவர்களினால் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (14) காலை பாடசாலையின் அதிபர் திருமதி ஆர்.கனகசிங்கம் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதிதிகள் மற்றும் முதலாம் தர மாணவர்களையும் பாண்டு வாத்திய இசை முழங்க வரவேற்பு அழிக்கப்பட்டதனை தொடர்ந்து பாடசாலை கொடி ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
மாணவர்களினால் சர்வமத இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து அதிபரின் தலைமையுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு , மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் மேடையினை அலங்கரித்தத்துடன், அதிதிகளின் உரைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


0 facebook-blogger:
கருத்துரையிடுக