மட்டக்களப்பின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29 வது ஆண்டு நினைவை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (28) நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடக தொழிற்சங்க செயலாளருமாகிய பா.அரியநேத்திரன் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் “கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29வது ஆண்டு வணக்க நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து '' மறந்தாலும் மண்ணும் இரையாகும் '' என்னும் தலைப்பில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விசேட நினைவுப்பேருரையினை நிகழ்த்தினார்.
அத்தோடு ‘’வாழ்வை நோக்கி’’ எனும் தலைப்பில் தலைமைக் கவிஞ்ஞர் அரசையூர் மேரா தலைமையில் கவியரங்கம் ஒன்றும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேஷன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன் ஆகியோரும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இக் கொலைச் சம்பவம் தொடர்பில் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து இக்கொலை சம்பவம் பிரபல்யம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடக தொழிற்சங்க செயலாளருமாகிய பா.அரியநேத்திரன் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் “கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29வது ஆண்டு வணக்க நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து '' மறந்தாலும் மண்ணும் இரையாகும் '' என்னும் தலைப்பில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விசேட நினைவுப்பேருரையினை நிகழ்த்தினார்.
அத்தோடு ‘’வாழ்வை நோக்கி’’ எனும் தலைப்பில் தலைமைக் கவிஞ்ஞர் அரசையூர் மேரா தலைமையில் கவியரங்கம் ஒன்றும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேஷன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன் ஆகியோரும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இக் கொலைச் சம்பவம் தொடர்பில் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து இக்கொலை சம்பவம் பிரபல்யம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக