வியாழன், 14 ஜனவரி, 2016

பாடசாலை கல்வியின் மகிழ்ச்சிக்கான ஆரம்பம் தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில்

பாடசாலை கல்வியின் மகிழ்ச்சிக்கான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்று (14.01.2015) வியாழக்கிழமை  அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றது.


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலும் தரம் ஒன்று மணவர்களை வரவேற்கும் நிகழ்வு காலை 09.00 மணியளவில் இடம் பெற்றது. 

இரண்டாம் தர மாணவர்களினால் முதலாம் தர மாணவர்களை வரவேற்று பாடசாலையில் ஒன்று கூடல் மண்டபத்தில் அழைத்து செல்லப்பட்டனர் மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கம் ஆகியவற்றை தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.





Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate