வடஇந்திய றோட்டரிக்கழக அனுசரணையில் ஜேர்மனி பிரான்ஸ் மற்றும் ஜக்கியஇராச்சியத்திலிருந்து 12 சர்வதேச வைத்திய நிபுணர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
கல்முனை றோட்டரிக்கழகம் ஏற்பாடுசெய்துள்ள மாபெரும் வைத்தியமுகாமில் கலந்துகொண்டு மக்களுக்கு 04தினங்கள் தங்கியிருந்து சேவையாற்ற அவர்கள் வருகைதருகின்றனரென கழகச்செயலாளர் மு.சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.
இப்பரிய முகாம் எதிர்வரும் ஜனவரிமாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
காது மூக்கு தொண்டை ஆகிய அபயவங்களில் ஏற்பட்டுள்ள நோய்களுக்காக மட்டும் விசேடமாக ஏற்பாடு செய்துள்ள இம்முகாமில் சர்வதேச விசேட வைத்தியநிபுணர்கள் சிகிச்சையளிக்கவிருக்கின்றார்கள்.
இச்சிகிச்சை முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பாரிய வைத்திய முகாமிற்கு கல்முனை றோட்டரிக்கழகத்தின் சார்பில் தகுதிவாய்ந்த இணைப்பாளராக பொறியியலாளர் றோட்டரியன் வீ.கிருஸ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக இதுவரை 1000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவுசெய்துள்ளதாக செயலாளர் சிவா மேலும் தெரிவித்தார்.
இன்னமும் இச்சேவைக்கான பதிவுகளை கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையிலும் பதிவு செய்து கொள்ள முடியும்.
இம்முகாமில் கேட்டல்குறைபாடுள்ள பொருத்தமானவர்களுக்கு ருபா 70ஆயிரம் பெறுமதியான 100 காதுகேட்கும் இயந்திரங்கள் இலவசமாக நிபுணர்களின் சிபார்சில் வழங்கி வைக்கப்படவுள்ளன.
மேலும் பொய்க்கால்கள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேவையானோர் பதிவுசெய்து கொள்ளுமாறும் செயலாளர் சிவா மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக