வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஏறாவூரில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நால்வர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகரில் தம் வசம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை வியாழக்கிழமை இரவு தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று பொது மக்களிடம் இருந்து கிடைத்த துப்புத் தகவலின் படி இந்த நால்வரும் ஹெரோயின் போதைப் பொருளைத் தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் வைத்து மூவரும், ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் வைத்து மற்றொருவருமாக ஏக காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புன்னைக்குடா வீதியில் கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் தலா 30 மில்லிகிராம் ஹெரோயினும், ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து 20 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate