புதிய ஆண்டு பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட பூஜைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புத்தாண்டு பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் நடைபெற்றது.
பேராலயத்தின் பங்குத்தந்தை அலக்ஸ் ரொபட் அடிகளார் தலைமையில் புதுவருட விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது
இந்த வழிபாடுகளின்போது நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும்,சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் விடுதலை வேண்டியும் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படவும் விசேட பிரார்த்தனைகள் ஆயரினால் நடாத்தப்பட்டது.
இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக