திங்கள், 4 ஜனவரி, 2016

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான ஒரு தொகுதி பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் இதனை இன்று வழங்கி வைத்துள்ளார்.
மேலும், குறித்த நிகழ்வுக்கான அனுசரணையினை மட்டக்களப்பு லெடர் ஒப் ஹோப் நிறுவனம் வழங்கியிருந்தது.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தொழில் துறைத் திணைக்கள வளாகத்தில் இயங்கும் இந்த கூட்டுறவுச் சங்கம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் பெண்களை அங்கத்தவர்களாகக் கொண்டதாகும்.
எனவே, குறித்த அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கே இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate