2015ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.
இதனை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
கையடக்கத் தொலைபேசியில் பெறுபேறுகளைப் பெற EXAMS INDEX No என type செய்து
7777 Dialog8884 Mobitel7545 Airtel3926 Etisalat8888 Hutchஎன்பனவற்றுக்கு அனுப்பலாம்
எமது இணையத்தளத்தில் www.battinews.lk அருகில் உள்ள பெட்டியில் நீங்கள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளைப் பெறலாம்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில் மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய முடிவுகளின் திருப்பியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக