விவசாயத்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விவசாய அபிவிருத்திக்கான விழிப்புணர்வு பல்வேறு பிரதேசங்களிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது இன்று 11.01.2016 ஆந் திகதி காலை 10.00 மணிக்கு காந்திபுரம் விவசாயவிரிவாக்கல் பிரிவுக்குட்பட்ட காந்திபுரத்தில் மறுவயல் பயிர்செய்கைக்கான விழிப்புணர்வு நிகழ்வு ஓன்று விவசாயப்போதனாசிரியர் பீ.கீர்த்திகா தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
இந் நிகழ்வுக்காக மட்டக்களப்பு உதவி விவசாயப்;பணிப்பாளர் செல்வி எம்.சிவஞானம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மறுவயல் பயிர்கள் பாடவிதான உத்தியோகஸ்தர், மற்றும் விவசாய போதனாசிரியர்கள்,பிரதேச கிராமசேவகர்,மற்றும் பல்வேறு உத்தியோகஸ்தர்களும், விவசாயிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக