யுத்தத்தால் மிக மோசமாக பாதிப்புற்ற கிளிநொச்சி மாவட்ட, விநாயகபுரம் இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் 76 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், உடைகள் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் 10 பேருக்கும் உலருணவுப்பொதி என்பனவற்றை புலம் பெயர் நாட்டில் உள்ள எமது உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பில் இயங்கி வரும் 'வாசம் உதவும் உறவுகள்' அமைப்பு வழங்கியுள்ளது.
கடந்த (31) திகதி இராமகிருஷ்ண வித்தியாலயத்தி ல் நடைபெற்ற இவ் மக்கள் பணிக்கு குறித்த அமைப்பின் தலைவர் பிரபாகரன், கலைஞர் ரெஜீஸ், யோ.புரட்சி, கிராம சேவையாளர் யசோதினி, அதிபர் சூரியகுமாரி, கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், ஆகியோர் இப்பணியுடன் இணைந்திருந்தனர்
உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்;
யுத்தத்தால் மிக மோசமாக பாதிப்புற்ற கிளிநொச்சி மாவட்ட, விநாயகபுர மக்கள் தமது வாழ்வாதார மேம்பாட்டிற்காக கூலித் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்
இப்பிரதேசத்தில் 2013 ம் ஆண்டு 1 ம் மாதம் 1 ம் திகதி ஆரம்பிக்க பட்ட இவ் பாடசாலை அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் கிடுகினால் வேயப்பட்ட கொட்டகை ஒன்றிலேயே தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களோடு இன்று வரைக்கும் இயங்கி வருவதாகவும் இந்த கஷ்ட பட்ட மாணவர்களுக்கு 'வாசம் உதவும் உறவுகள்' அமைப்பு இவ் உதவியை செய்திருப்பது சந்தொசமளிப்பதாகவும் 'வாசம் உதவும் உறவுகள் போன்ற அமைப்புக்கள் இவ்வாறான பணிகளை இன்னமும் செய்ய வேண்டும் எனவும் நான் உங்களிடம் இவ்வாறான உதவிகளை கேட்பது எனக்காக அல்ல இந்த கஷ்டப்பட்டு வாழுகின்ற குழந்தை செல்வங்கள் ஒரு நல்ல பிரஜை களாக வளர வேண்டும் என்பதற்காகவே என தெரிவித்தார்.
இதன்போது அங்கு வந்திருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் சார்பாக ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவிக்கையில்;
இந்த வாசம் உதவும் உறவுகள்' அமைப்பு இவ் உதவியை செய்திருப்பது பல நெருக்கடிகளுக்குள் வாழும் எமக்கு குறைந்தது ஒரு கிளைமைக்கவது நாம் பசியாறக்கூடிய கூடிய உலருணவுப் பொதிகளை வழங்கி உள்ளார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இவ்வாறான உதாவிகளை இவ் ஏழை மக்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக