வெள்ளி, 8 ஜனவரி, 2016

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சந்திவெளி கிளைக்காரியாலயத்தினால் பாற்சோறு பகிர்தளிப்பு - ஒருவருட பூர்த்தி நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி வேண்டியும் மட்டக்களப்பிலும் விசேட வழிபாட்டு நிகழ்வுகள், மர நடுகைகளும் இடம் பெற்றன.


அதற்கு அமைவாக மட்டக்களப்பு சந்திவெளியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சந்திவெளி கிளைக்காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் பொறுப்பாளர் ரீ.யசோதரன் தலைமையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.

சந்திவெளி பிள்ளையார் ஆலயம் மற்றும் வேப்பையடி பிள்ளையார் ஆலயம் என்பவற்றில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதனைத் தொடர்ந்து, கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் வீதியால் சென்றவர்களுக்கு பாற் சோறு வழங்கப்பட்டு ஜனாதிபதியின் பதவியேற்பு ஒருவருட பூர்த்தி மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை இந் நிகழ்வுகளில் அதிகளவான பொதுமக்களும், இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate