அரச சேவையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 வயது வரை நீடிப்பது தொடர்பான யோசனையை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெறும் தீர்மானத்தை தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாணந்துறை ஸ்ரீ சுமங்கள ஆண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் 85 வயது வரை தமது கல்வி ஞானத்தை மற்றவர்களுக்கு பெற்றுக்கொடுத்த பேராசிரியர்கள் உள்ளனர்.
அறிவை பகிர்ந்து கொடுக்கக் கூடிய சிறந்த வயதில் இலங்கையின் அரச ஊழியர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது.
இந்த நிலைமையை நிறுத்தி, அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக