செவ்வாய், 5 ஜனவரி, 2016

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட பிரிவு 7ஆம் திகதி ஆரம்பம்


(முஹம்மட் ஆக்கில் & லியோன்)


கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட பிரிவு 7ஆம் திகதியே ஆரம்பமாகும் என அதிபர் வெஸ்லியோ வாஸ் தெரிவித்தார்.

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் காரணமாகவே 7ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதனைப் போன்று மிக்கேல் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு நாளை புதன்கிழமை ஆரம்பமாகும் என்றும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறாத பாடசாலைகள் யாவும் நேற்றைய தினம் 04ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன.விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் பாடசாலைகள் மாத்திரம் இவ்வருடம் முதலாம் தவணைக்காக 6ஆம் தகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate