திங்கள், 4 ஜனவரி, 2016

எதிர்பார்த்த A/L பெறுபேறுகள் கிடைக்காததால் மாணவி தற்கொலை முயற்சி

திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்பார்த்தது போன்று வெளிவராத விரக்தியில் 25 மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணொருவர் மயக்கமான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானைப் பகுதியைச் சேர்ந்த மஜ்ரியா வயது(18) என்ற பெண்ணே 25 மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானைப் பகுதியில் குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (3) பகல் வேளையில் 25மாத்திரைகளை குடித்துவிட்டு அறையைப் பூட்டிக்கொண்டு தூங்கியுள்ளார்.
வீட்டிலுள்ளவர்கள் மகள் தூங்கிக்கொண்டு இருக்கின்றார் என எண்ணி விட்டுள்ளனர். பின்பு நீண்ட நேரமாகியும் குறித்த பெண் எழும்பாததால் வீட்டிலுள்ளோர் கதவைத்திறந்து பார்த்த போதே உறவினர்களுக்கு மாத்திரைகள் உட்கொண்டது தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் தாய், தந்தை வெளிநாட்டில் தொழிலுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate