நேற்று வெளியான க.பொ.த.உயர்தரப்பரீட்சையின் உயிரியல்துறையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக்கல்லூரி மாணவன் மயில்வாகனம் சாருஜன் 3ஏ அதிவிசேட சித்தி பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.மயில்வாகனம் தம்பதிகளின் புதல்வனான சாருஜன் தேசிய மட்டத்தில் 12ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கல்முனை பற்றிமாக்கல்லூரியில் இதுவரை 06 மாணவர்கள் வைத்தியத் துறைக்குத் தெரிவாகியுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
காரைதீவில்…
அதேவேளை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்படாலாமெனத் தெரிகிறது.
மாணவி நந்தேஸ்வரன் லோஜிதா உயிரியல்துறையில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 8வது நிலையைப் பெற்று கோட்டத்தில் முதனிலையைப் பெற்றுள்ளார்.
புஸ்பநாதன் இந்துஜா 2ஏபி சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் 13வது நிலையை பெற்றுள்ளார். லோகேஸ்வரன் கினோசா ஏ2பி பெற்று மாவட்டத்தில் 31வது நிலையை பெற்றுள்ளார்.
கணிதத்துறையில் இருவரும் கலைத்துறையில் எண்மரும் தெரிவாகலாமெனத் தெரிய வருகிறது.


0 facebook-blogger:
கருத்துரையிடுக