செவ்வாய், 13 அக்டோபர், 2015

தாமரைக்கேணி கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா.

மட்டக்களப்பு – தாமரைக்கேணி  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலையின் கீழ்  எழுந்தருளியிருக்கும் கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா  15 .10.2015 வியாழக்கிழமை  காலை 07.32  மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது .

இதனை முன்னிட்டு இன்று காலை ஆலயத்தில்  வீரகத்தி விநாயகர் வழிபாடுகளும்  , கணபதி ஹோமத்துடன் கிரிகைகளும்  இடம்பெற்றதுடன்  நாளை அதிகாலை சுவாமிகளைப் பிரதிஷ்டை செய்யப்பட்டு  தொடர்ந்து எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு மாலை 05.00 மணி வரை இடம்பெறும் .

 இதனை தொடர்ந்து 15 .10.2015   வியாழக்கிழமை காலை 07.32  மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் ஆலய பிரதம குரு சக்தி .கே . குமாரதாசன் தலைமையில்   விசேட கிரிகைகளுடன் ஆரம்பமாகி  வீரகத்தி விநாயகர் வழிபாடுகளும்  கணபதி ஹோம யாக பூஜைகள் இடம்பெற்று தாமரைக்கேணி  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலையின் கீழ்  எழுந்தருளியிருக்கும் கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெறவுள்ளது .








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate