மட்டக்களப்பு – தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலையின் கீழ் எழுந்தருளியிருக்கும் கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா 15 .10.2015 வியாழக்கிழமை காலை 07.32 மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது .
இதனை முன்னிட்டு இன்று காலை ஆலயத்தில் வீரகத்தி விநாயகர் வழிபாடுகளும் , கணபதி ஹோமத்துடன் கிரிகைகளும் இடம்பெற்றதுடன் நாளை அதிகாலை சுவாமிகளைப் பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ந்து எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு மாலை 05.00 மணி வரை இடம்பெறும் .
இதனை தொடர்ந்து 15 .10.2015 வியாழக்கிழமை காலை 07.32 மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் ஆலய பிரதம குரு சக்தி .கே . குமாரதாசன் தலைமையில் விசேட கிரிகைகளுடன் ஆரம்பமாகி வீரகத்தி விநாயகர் வழிபாடுகளும் , கணபதி ஹோம யாக பூஜைகள் இடம்பெற்று தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலையின் கீழ் எழுந்தருளியிருக்கும் கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெறவுள்ளது .
0 facebook-blogger:
கருத்துரையிடுக