புதன், 14 அக்டோபர், 2015

சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து விடுதலைசெய்ய நடவடிக்கையெடுங்கள் -பிரசன்னா இந்திரகுமார் கோரிக்கை

சட்டத்தில் திருத்தங்களை செய்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம கோரிக்கை விடுப்பதாக கிழக்கு மாகாசபையின் பிரதி தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.


எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றினை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்று பார்வையிட்டார்.

நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 13 கைதிகள் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு சென்ற அவர் சிறைச்சாலையில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,

இலங்கையில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் எமது தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.அவர்களின் விடுதலை தொடர்பில் எமது நாட்டின் ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.

அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையினை துரிதப்படுத்தி எவ்வளவு விரைவாக விடுதலைசெய்யமுடியுமோ அவளவு விரைவாக விடுதலைசெய்யப்படவேண்டும்.சிறையில் பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் இன்று சொல்லொண்ணா துன்பங்களில் வாடிவருகின்றது.

இந்தவகையில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என கோரி தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளேன்.

இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்.இந்த நாட்டில் தமிழ் அரசியல்கைதிகள் தொடர்ந்து இவ்வாறு உள்ளது மிகவும் வேதனையான விடயமாகும்.

எனவே சட்டத்தில் திருத்தங்களை செய்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்.







Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate