வெள்ளி, 1 ஜனவரி, 2016

அடிப்படை வசதிகளை வழங்குவதில் புறக்கணிக்கப்படும் கோப்பாவெளி கிராமம்

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராம மக்கள் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தும்பாலம் சோலை கோப்பாவெளி, மற்றும் வெலிக்காசந்தி ஆகிய மூன்று கிராமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா ஓயாவிற்கு அருகிலுள்ள எல்லைக்கிராமமான கோப்பாவெளி கிராமம் நேரடியாக யுத்தத்திற்கு முகம்கொடுத்தததாகவும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளை சந்தித்து பின்னர் 2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகரங்கள் மற்றும் சில அடிப்படை பொருட்கள் என்பவற்றை மாத்திரமே வழங்கியதாகவும் தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே தான் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பிரதசே மக்கள் செய்திகளுக்கு தெரிவித்துள்ளனர்.
தமது காணிகளை அதிகவிலை கொடுத்து திட்டமிட்ட முறையில் சுவீகரித்து வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate