செவ்வாய், 5 ஜனவரி, 2016

கற்றல் உபகரணப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

(முஹம்மட் ஆக்கில்)

மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப்பொதிகள் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கே.துரைராஜசிங்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுக்கோட்டுக்கு கீழ் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டு வரும் இவ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிராந்திய உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் நமசிவாயம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate