வியாழன், 7 ஜனவரி, 2016

இந்திய புகைப்பட பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளும் புகைப்படக்கலை செயலமர்வு!


மட்டக்களப்பில் ஊடக கற்கைநெறிகளை நடாத்தி வரும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடககக் கற்கைகள் நிறுவகம் இளம் புகைப்பட படைப்பாளிகள் மற்றும் புகைப்பட பத்திரிகையாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு ஒன்றை நடாத்தவுள்ளது.

எதிர்வரும் 10 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் அமைந்துள்ள வொய் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெறுவுள்ளது. 

சென்னையிலிருந்து வருகைதரும் புகைப்பட பத்திரிகை யாளரும் மாற்று சினிமாவுக்கானசெயற்பாட்டாளருமான ஜீ.கண்ணன் இந்த கருத்தரங்கை நிகழ்த்தவுள்ளார். 

அவருடன் யாழ்ப்பாணத்திலிருந்து புகைப்பட பத்திரிகையாளரும் ஊடகவியலாளருமான      ரி. ஜெயராஜூம் இதழியலில் புகைப்பட நுணுக்கங்கள் தொடர்பாக விரிவுரையாற்றவுள்ளர்.

புகைப்படவியலின் அடிப்படைகள், கருவி பயன்பாடு, புகைப்படவியலும் கலாசாரமும், புகைப்படவியலும் ஊடகங்களும் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெறும். முடிவில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இக்கருத்தரங்கில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் 0652222832, 0758265824 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தமது பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு வொய் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளர் பிரியா சிவமோகன் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புகைப்படக்கலை டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் ஆர்வமுள்ளவர்களை தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். 





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate