செவ்வாய், 12 ஜனவரி, 2016

இலவசமாக பயிற்சிநெறிகளை வழங்கும் புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழினுட்பவியல் கல்லூரி

வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நாமத்தோடு அவரது தத்துவத்தினடிப்படையில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் கம்பீரமாக காட்சியளிக்கும் விவேகானந்த தொழினுட்பவியல்கல்லூரியின் வயது 4 வருடங்களை அண்மிக்கின்றது.
இன்று சுவாமிவிவேகானந்தரின் 153வது பிறந்ததினத்தினைசிறப்பிக்கும் வகையில் பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையில் கல்விகற்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்குஅப்பியாசக் கொப்பிகள்,பாடசாலை உபகரணங்களைவழங்கிவருகின்றோம்,அவ்வாறே இந்தவருடமும் அவற்றினைவழங்கவிருக்கின்றோம் என்று விவேகானந்ததொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.
இலவச பயிற்சிநெறிகள்.
இவ்வாறுசிறப்பாகநடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்லூரிக்குஇதுவரைவெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ளஉறவுகளின் முற்றுமுழுதானஆதரவினாலேயேஇச் செயற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. நடைபெறும் பயிற்சிநெறிகள் இலவசமாகவேநடைபெறுவதோடு, அப் பயிற்சியினை பெற்றுக்கொண்டவர்கள் அதன் பிரதியுபகாரமாகவும்,விவேகானந்தரின் அறைகூவலைஏற்ற இளைஞர்,யுவதிகளாகவும்’விவேகானந்த இளைஞர் அணி’ஒன்றைஉருவாக்கிதற்போதையசமூகத்தின் முக்கியதேவையாக உள்ளகல்வித்துறைக்குதங்களைஅர்ப்பணித்துவருவதுபெருமைக்குரியவிடயமாகும்.
‘இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல,பயன்படுத்தப்படாதவர்கள்’ அத்தோடு’ஒருசில நூறு இளைஞர்களை தாருங்கள் இந்தஉலகத்தையேமாற்றிக் காட்டுகின்றேன்’; என்றசுவாமிவிவேகானந்தரின் அறைகூவலிற்குஅமைவாகவே இந்தவிவேகானந்த இளைஞர் அணியிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுஎன்றும்,தற்போதையஎமதுசமூகத் தேவைகல்வியினையும்,திறனையும் மூலதனமாக்கிஒருவரைபூரணமனிதனாக்குவதனூடாகவேசமூகத்தில் மாற்றத்தினையும்,சமூக,பொருளாதாரஅபிவிருத்தியையும் அடையமுடியும் என்றவகையில் எமதுகல்லூரிசார்பாகஎம்மாலானசெயற்பாட்டினைமுன்னெடுத்துவருகின்றோம், இதற்குபக்கபலமாகநிதி,மற்றும் சரீரஉதவியினைசெய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவேகானந்ததொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் நன்றியினைதெரிவித்துக்கொண்டார்.
வரலாறு!
மட்டக்களப்பின் மன்முனைபற்று பிரதேசசெயலகத்திற்கு உட்பட்டபுதுக்குடியிருப்புஎன்னும் கிராமத்தில் மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதியிலே கம்பீரமானசுவாமிவிவேகானந்தரின் சிலையுடன் காட்சியளிக்கும் இக் கல்லூரியானது 2012.04.04 ம் திகதிகல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிகபீலானந்தாஜீ மகராஜ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

இக்கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்கள் இளவயதில் இருந்தேசுவாமிவிவேகானந்தரின் கருத்துக்களால் கவரப்பட்டு தனதுகல்லூரிப் படிப்பைமுடித்துவிட்டு திருப்பழுகாமத்தில் கைவிடப்பட்டபெண் குழந்தைகளுக்காகதிலகவதியார் மகளிர் இல்லம்,அதன் பின்னர் சமூகத்திற்கு தேவைப்பட்டமனிதநேயஉதவிகளைசெய்வதற்கானவிவேகானந்தநலன்புரிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுஅதனைமேலும் விரிவாக்கிசமூகநலன்புரிஅமைப்புஎன்றநாமத்துடன் ஆரம்பித்துவைத்தார்.
இந்தசமூகநலன்புரிஅமைப்பின் 15 வருடங்கள் ஆற்றியஉன்னதசேவையின் நிமிர்த்தம் அமைப்பிற்கானநிரந்தரகட்டிடம் அமைக்கும் பணியில் அதனைஒருதொழில்பயிற்சி கூடமாகஆரம்பிக்கவும்,சுவாமிவிவேகானந்தரின் பெயரினைசிறப்பிக்கவுமேஅவரால் முன்மொழியப்பட்டதுதான் இந்தவிவேகானந்ததொழில்நுட்பவியல் கல்லூரிஆகும்.
கல்லூரிபிரதேசத்தில் காணப்படும் இளைஞர்,யுவதிகள் அனைவருக்கும் அடிப்படைகணினிஅறிவினைபெற்றுக்கொடுக்கும் நோக்கில் பாடசாலைக் கல்வியினைபூர்த்திசெய்தவறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்காகஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் பிரதேசத்தின் தேவையின் நிமிர்த்தமும்,அரசஅங்கீகாரம் மற்றும் பலநல்லஉள்ளங்களின் ஆதரவு,அயராதஉழைப்பினாலும் தற்போதுசமூகபொருளாதாரமாற்றத்தைஏற்படுத்தும் நோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
பயிற்சிநெறிகள்!

இலங்கையில் தொழில்க்கல்விநிறுவனங்களுக்குபொறுப்பாகஉள்ள மூன்றாம் நிலைக்கல்விதொழில்க்கல்விஆணைக்குழுவில்(TVEC)பதிவுசெய்யப்ட்டுஅரசஅங்கீகாரம் பெற்றசான்றிதழினைவழங்குவதோடுதற்போதுதேசியதொழில் தகைமை((NVQ)தரச்சான்றிதழினைவழங்கக்கூடியபயிற்சிநெறிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
தற்போதையஉட்கட்டமைப்புவசதிகளைஅடிப்படையாகக் கொண்டுஇலக்குக் குழுக்களில் இருந்துதெரிவு செய்யப்பட்டபயிலுனர்களுக்கு திறன்விருத்திபயிற்சினைவழங்கிஅவர்களினைஒருவேலைவாய்ப்பினைபெறக்கூடியவகையில் திறனுடையவர்களாக்குவதேகுறிக்கோளாகும்.

அந்தவகையில் Information and Communication Technology Technician (NVQ Level 4), Computer Application Assistant (NVQ Level 3), Computer Graphic Designer (NVQ Level 4), Tailor (NVQ Level 4)
ஆகியபயிற்சிநெறிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மேலும் உள்நாட்டு,வெளிநாட்டுவேலைவாய்ப்பினைகருத்தில் Pre-School Teacher (NVQ Level 4), Industrial Sewing Machine Operator (ISMO – NVQ Level 3), Sewing Machine Mechanic (NVQ L3), Computer Network Technician + CCTV + PABX, Quality Controller (Apparel Production)
போன்றபயிற்சிநெறிகளைஎதிர்காலத்தில் நடாத்துவதற்கானதிட்டமிடலும், அதற்கானதகவல் சேகரிப்பும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அத்தோடுதொழில்செய்வோர்,கணினிஅடிப்படைதிறன் உள்ளவர்களிற்கு முற்கூட்டியஅனுபவம் சார் முறைமையினூடாக(சுPடு) தேசியதொழில்தகைமைசான்றிதழினையும் (Nஏஞ)பெற்றுக்கொள்ளக்கூடியவசதிகளும் உள்ளது. அவ்வாறேதொழில் செய்வோறுக்குஏற்றசிலபயிற்சிகளினைபகுதிநேரங்களில் நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்லூரியின் சிறப்பானசெயற்பாட்டினைஉறுதிசெய்துகொள்ளும் வகையில் சர்வதேசதரநிர்ணயசட்டமானISO 9001:2008 and IWA 2:2007இற்குஅமைவாககல்லூரியில் ஸ்தாபித்துநடைமுறைப்படுத்தப்படுகின்றதரமுகாமைத்துவமுறைமையின் (Quality Management System – QMS)முதலாம் படிதரஆய்வானது மூன்றாம் நிலைக்கல்விதொழில்கல்விஆணைக்குழுவின் தரஆய்வுகுழுவால் ஆய்வுசெய்யப்பட்டுசிலகுறைநிரப்பல்களுடன் இரண்டாம் படிநிலைக்கு 2015.07.29ம் திகதிபரிந்துரைக்கப்பட்டது.
அதன் பின்னர் இரண்டாம் படிநிலைதரஆய்வானதுகடந்த 2015.08.29 ஆம் திகதிநடைபெற்று இன்னும் சிலகுறைநிரப்பல்களைபூர்த்திசெய்யும் பட்சத்தில்,சான்றிதழ் பெறல் தொடர்பானஅனுமதிக்கு மூன்றாம் நிலைக்கல்விதொழில்கல்விஆணைக்குழுவின் மத்தியகுழுவுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எல்லாகிராமங்களிலும் உள்ளகல்லூரியில் பயிற்சியினைபூர்த்திசெய்தபயிலுனர்கள் ஒன்றிணைந்துஉருவாக்கியவிவேகானந்த இளைஞர் அணியானது’மாணவர்களின் மாற்றத்திற்கானவலுவூட்டல்(Student Empowerment for Transformation – SET) என்னும் குறிக்கோளுடன் தங்கள் செயற்பாட்டினைமுன்னெடுக்கின்றனர்.
தற்போதையசெயற்பாடுகளாகபின்தங்கியயுத்தசூழ்நிலையால் பாதிக்கப்பட்டபிரதேசங்களில் உள்ளமாணவர்கள் தரம் 6 க்குமேற்பட்டவர்களில் அனேகமானோர் எழுதுதல்,வாசித்தலில் இடர்படுதலாலேபாடசாலையில் இருந்துஇடைவிலகுகின்றமை கள ஆய்வின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டது,அத்தோடுவறுமைகாரணமாககுடும்பச் சுமை சிலமாணவர்கள் தலைகளில் சுமத்தப்படுவதும் காரணமாகின்றது.

எனவே இவற்றினைகருத்தில் கொண்டுபாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 8 வரைக்கும் உள்ளமாணவர்களில் வாசித்தல்,எழுதுதலில் இடர்படும் மாணவர்களிற்குபிரத்தியோகமானமுறையில் விவேகானந்த இளைஞர் அணியினர் வகுப்புக்களைஒழுங்குபடுத்திஅவர்களுக்கானகல்வியினைவழங்குவதற்குமுன்வந்துள்ளனர். அத்தோடுபாடசாலைஉபகரணம்,அப்பியாசக் கொப்பிகளையும் போதுமானஅளவுக்குவழங்குவதன் மூலமாகவும் இடைவிலகலைகுறைத்துக்கொள்ளமுடியும்.
அத்தோடுபல்வேறுகாரணங்களால் பாதிக்கப்பட்டஎமதுசமூகத்தினைஒருவளமிக்கசமூகமாகமாற்றஅனைவரும் ஒன்றிணைந்துசெயற்படவேண்டும் என்றும்,வருடாந்தம் ஜனவரி 12ம் திகதிசுவாமிவிவேகானந்தரின் பிறந்ததினத்தினைசிறப்பிக்கும் வகையில்எமதுபிரதேசத்தில் காணப்படும் பாடசாலையில் கல்விகற்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்குஅப்பியாசக் கொப்பிகள்,பாடசாலைஉபகரணங்களைவழங்கிவருகின்றோம்,அவ்வாறே இந்தவருடமும் அவற்றினைவழங்கவிருக்கின்றோம் எனவேதர்மஉள்ளம் கொண்டவர்கள் இம் மாணவர்களின் கல்விவளர்ச்சிக்குதங்களால் முடிந்தளவு உதவியினை செய்ய முன்வருமாறும் வேண்டிக்கொண்டார் விவேகானந்ததொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர்,க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.
படங்களும் தகவலும் வி.ரி.சகாதேவராஜா-
vtc (9)
vtc (10)
vtc (11)
vtc (1)
vtc (2)
vtc (3)
vtc (4)
vtc (5)
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate