சர்வதேச சத்தியசாயி நிலைய இலங்கை கிழக்குப் பிராந்திய சத்ய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் மண்டூர் சத்திய சாயி நிலையத்தின் அனுசரணையுடன்,நடைபெற்ற இரத்ததான நிகழ்வு, 2 சனிக்கழமை காலை 9.30 மணியளவில் மண்டூர் லோரன்ஸ முன்பள்ளியில் நிலையத் தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் வருகை தந்து இரத்ததானத்தை சேகரித்துச் சென்றனர். மண்டூர் சத்திய சாயி நிலையத்துடன் இணைந்து மண்டூர் பிரதேசத்தில்லுள்ள விஸ்ணு,மதி ஒளி,அருள் மணி கருணாகரன்,நாகர் விளையாட்டுக்கழக வீரர்கள்,சாயி நிலைய அங்கத்தவர்கள்,ஆலய குருக்கள்,அரச உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் இரத்ததானம் செய்தனர்.
இலங்கைக்கான சத்திய சாயி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர்.என்.பிறேமதாசன் கிழக்குப் பிராந்திய சத்யசாயி இணைப்புக்குழு சேவா இணைப்பாளர் ஸ்ரீ.பொ.விஜிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.













0 facebook-blogger:
கருத்துரையிடுக