(கிரான் விஜிகரன்) மட்டக்களப்பு சித்தாண்டி மக்களின் வேட்பாளர் தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்தக்கோரிக்கையை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் நிறைவேற்றுவதற்கு எமது கட்சி வாய்ப்பளிக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த சித்தாண்டி அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் அதன்பின்னர் ஏற்பட்ட சில முரண்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்;
சித்தாண்டி பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுயேட்சையாகபோட்டியிடும் வேட்ப்பாளர்கள் இன்றையதினம் என்னைவந்து சந்தித்திருந்தனர். சித்தாண்டி பிரதேசத்திற்கான வேட்ப்பாளர் தெரிவில் இடம்பெற்ற குறைகளை எனக்கு மனம் திறந்து கதைத்திருந்தார்கள் இம்முறை அவர்களுக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்காததையிட்டுஅவர்கள் தங்களுடைய அதிருப்தியை என்னிடம் தெரிவித்தார்கள்.
சித்தாண்டிகிராமத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமாக தமிழ் மக்களின் வாக்குகள் இருக்கின்றது. ஆனபடியால் அவர்களின் கோரிக்கை ஒருநியாயமான கோரிக்கை துரதிஸ்டவசமாக அவர்களுடைய கோரிக்கை இந்த பாராளுமன்ற தேர்தலில் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் நிச்சயமாக சித்தாண்டி மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து கட்சி இந்தவிடயத்தில் சித்தாண்டி மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது அவசியம். அவ்விதமான மதிப்பை கொடுப்பதற்கு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் ஒரு சந்தர்ப்பத்தையளிக்கும்.
அவ்விதமான சூழலில் சித்தாண்டி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவகையில் கட்சிசெயற்படும் என்ற வாக்குறுதியை நான் அவர்களுக்கு கொடுத்திருக்கின்றேன்.
அவர்களும் நாங்கள் கட்சிக்காக நீண்டகாலஅனுதாபிகள் ஆதரவாளர்கள் என்றஅடிப்படையில் கட்சிக்காக இத்தேர்தலில் போதுமான வெற்றியைப் பெறுதற்குஉழைப்பார்கள் என்றவாக்குறுதியை என்னிடம் தந்திருக்கின்றார்கள் என்று கூறினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக