திங்கள், 11 ஜனவரி, 2016

அட்டாளைச்சேனையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 04 பேர் கைது

(முஹம்மட் ஆக்கில்)


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வீதி ரோந்து நடவடிக்கையின் ஈடுபட்ட பொலிஸார் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 16 வயதுடைய 03 சிறுவர்கள் உட்பட  04 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




இவர்களை கைது செய்துள்ளதுடன் இவர்களிமிருந்து 7 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 02 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன அதேவேளை பொலிஸாரை கண்டு ஓடிய ஒருவரை பொலிஸார் துரத்திப்பிடித்து கைது செய்தபோது அவர் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை  அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதற்கிணங்க இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate