வெள்ளி, 10 ஜூலை, 2015

கொரியா செல்வோருக்கான நேர்முகப் பரீட்சை 13ம் திகதி

கொரியமொழி தகுதிகான் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தோருக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

நாடு பூராகவும் உள்ள 09 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 17ம் திகதி வரை நேர்முகப் பரீட்சை நடைபெறும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இந்த முறை தகுதிகான் பரீட்சைக்கு 13083 பேர் தோற்றியிருந்ததுடன் அதில் 4294 பேர் சித்தியடைந்துள்ளனர். 

பரீட்சையில் சித்தியடைந்தோரின் பெயர் விபரம் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமது சுட்டெண்ணை உட்செலுத்துவதனூடாக நேர்முகப்பரீட்சை இடம்பெறும் இடம், காலம் என்பதனை தெரிந்து கொள்ள முடியும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624844

Translate