வெள்ளி, 10 ஜூலை, 2015

விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா

கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம்  மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 19.07.2015 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

சம்மேளனத்தின் தலைவர் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சம்மேளனத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் மற்றும் உயர் கல்வி கற்பதற்காக 2015 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகவிருக்கும் மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக நமுணுகுல மதங்கமா மகரிஷி ஆஷ்ரமத்தின் தலைவர் விஸ்வப்பிரம்மஸ்ரீ இராஜமாதங்கி சுவாமிகள் ஆன்மீக உரையாற்றுவார்.

கொழும்பு பட்டக்கண்ணு பவுண்டேசன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ. தியாகராஜா மற்றும் மட்டக்களப்பு,கல்முனை, கொழும்பு ஆகிய நகரங்களில் உள்ள சொர்ணம் குழுமங்களின் தவிசாளர் முத்துப்பிள்ளை விஸ்வநாதன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும்,
ஓய்வு நிலை நீதிபதி கா. தட்சணாமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிட்சை நிபுணர் பீதாம்பரம் ஜீபரா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,
ஏறாவூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம பூசகர் குமாரசாமி வாமதேவன் மற்றும் பெரியபோரதீவு விஸ்வகர்ம ஆதியீன ஆய்வாளர் கலாபூசணம் பூ.ம. செல்லத்துரை ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்வர்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624896

Translate