மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளுக்கான இப்தார் வைபவம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.எம்.அக்பர் தலைமையில் நடைபெற்றது.
சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்கள கோறளைப்பற்று மத்திய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை ஹிறா பவுண்டேசன் இதனை ஏற்பாடு செய்திருந்தது. ஹிறா பவுண்டேசன் பணிப்பாளர் பீ.பாறூக், சிறைச்சாலை பிரதம சிறைக் காவலர் கே.பிரபாகரன், சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.சுசிதரன், சிறைச்சாலை நலன்புரி சங்க தலைவர் என்.பீ.ரஞ்சன், செயலாளர் வி.பிரதீபன் உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர். மௌலவி ஏ.எம்.நௌபலீன் மார்க்க உபன்யாசம் நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள அனைத்து முஸ்லிம் கைதிகளும் இப்தார் நிகழ்வில் பங்கு கொணடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக