எனது வெற்றி தனிப்பட்ட வெற்றியல்ல. அம்பாரை மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி என்பதுடன் எனது சகவேட்பாளர்களினதும் கூட்டு வெற்றி என நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு 17779 விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் ,ன்று (19) அக்கரைப்பற்றில் உள்ள அவரது ,ல்லத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் ,வ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கு வாக்களித்த மக்களுக்கும் அதேபோல் எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் அம்பாரை மாவட்ட மக்களின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு சிறந்த உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவேன் என உறுதியளித்தார்.
,ன மத சாதிய வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் பக்கச்சார்பின்றி செயலாற்றுவேன் எனவும் தமிழ்த்தேசியத்தை மனதில் நிலை நிறுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றார்.
வடகிழக்கிலே 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் கட்சியுடன் தலைமைத்துவம் ஊடாக பேரம் பேசி உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை அம்பாரை மாவட்ட மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் எமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் பாதை மாறிசென்ற தமிழ் மக்களும் எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போடு ,ணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் ,ன்று (19) அக்கரைப்பற்றில் உள்ள அவரது ,ல்லத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் ,வ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கு வாக்களித்த மக்களுக்கும் அதேபோல் எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் அம்பாரை மாவட்ட மக்களின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு சிறந்த உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவேன் என உறுதியளித்தார்.
,ன மத சாதிய வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் பக்கச்சார்பின்றி செயலாற்றுவேன் எனவும் தமிழ்த்தேசியத்தை மனதில் நிலை நிறுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றார்.
வடகிழக்கிலே 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் கட்சியுடன் தலைமைத்துவம் ஊடாக பேரம் பேசி உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை அம்பாரை மாவட்ட மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் எமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் பாதை மாறிசென்ற தமிழ் மக்களும் எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போடு ,ணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக