மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் இன்று பிற்பகல் நடாத்தவிருந்த மாகாணமட்ட பரீட்சை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
குpழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் கணித வினாவிடை போட்டி இன்று வியாழக்கிமை பிற்பகல் 1.00மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்ததுதுடன் அதற்காக முற்பகல் 12.00மணிக்கு முன்பாக சமூகம் தருமாறு பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரிக்கு முற்பகல் 12.00மணிக்கு முன்பாக வருகைதந்து தமது வருகையினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தவேளையில் பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர்கள் அழைக்கப்பட்டு பரீட்சை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சை நடப்பதாக பெற்றோர்
எண்ணிக்கொண்டிருந்தவேளையில் பிற்பகல் 1.30மணி வரை பரீட்சை நடாத்தப்படாததை அறிந்த பெற்றோர் அது தொடர்பில் பரீட்சை அதிகாரிகளிடம் கோரியபோது பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் வரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளை சந்திப்பதற்காக பெற்றோர் வளாகத்திற்குள் முயற்சித்தபோதிம் உரிய அதிகாரிகள் வெளியில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிற்பகல் 4.00மணியானபின்னும் பரீட்சை நடைபெறாத நிலையில் பெற்றோர் கடும் விசனத்தினை தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முpக நீண்ட தூரத்தில் இருந்து இந்த பரீட்சைக்கு வந்ததாகவும் உரிய நேரத்திற்கு பரீட்சை ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பரீட்சை நிலையத்தில் இருந்த கல்வித்திணைக்கள அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டபோது,
பரீட்சைதாள் அச்சடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் பரீட்சை வினாப்பத்திரம் வெளியாகக்கூடாது என்ற காரணத்தினாலேயே பரீட்சை தாளை இன்று அச்சிட்டு பரீட்சை நடாத்த முனைந்ததாகவும் தெரிவித்தார்.
காலதாமதம் ஏற்பட்டதனால் பரீட்சை முடிவுற்றதும் அவர்கள் செல்வதற்கான பிரயான ஒழுங்குகள் செய்துவழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் நிசாம் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோரை தொடர்புகொள்ளமுயற்சித்தபோதும் தொடர்புகொள்ளமுடியவில்லை.
குpழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் கணித வினாவிடை போட்டி இன்று வியாழக்கிமை பிற்பகல் 1.00மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்ததுதுடன் அதற்காக முற்பகல் 12.00மணிக்கு முன்பாக சமூகம் தருமாறு பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரிக்கு முற்பகல் 12.00மணிக்கு முன்பாக வருகைதந்து தமது வருகையினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தவேளையில் பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர்கள் அழைக்கப்பட்டு பரீட்சை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சை நடப்பதாக பெற்றோர்
எண்ணிக்கொண்டிருந்தவேளையில் பிற்பகல் 1.30மணி வரை பரீட்சை நடாத்தப்படாததை அறிந்த பெற்றோர் அது தொடர்பில் பரீட்சை அதிகாரிகளிடம் கோரியபோது பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் வரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளை சந்திப்பதற்காக பெற்றோர் வளாகத்திற்குள் முயற்சித்தபோதிம் உரிய அதிகாரிகள் வெளியில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிற்பகல் 4.00மணியானபின்னும் பரீட்சை நடைபெறாத நிலையில் பெற்றோர் கடும் விசனத்தினை தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முpக நீண்ட தூரத்தில் இருந்து இந்த பரீட்சைக்கு வந்ததாகவும் உரிய நேரத்திற்கு பரீட்சை ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பரீட்சை நிலையத்தில் இருந்த கல்வித்திணைக்கள அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டபோது,
பரீட்சைதாள் அச்சடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் பரீட்சை வினாப்பத்திரம் வெளியாகக்கூடாது என்ற காரணத்தினாலேயே பரீட்சை தாளை இன்று அச்சிட்டு பரீட்சை நடாத்த முனைந்ததாகவும் தெரிவித்தார்.
காலதாமதம் ஏற்பட்டதனால் பரீட்சை முடிவுற்றதும் அவர்கள் செல்வதற்கான பிரயான ஒழுங்குகள் செய்துவழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் நிசாம் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோரை தொடர்புகொள்ளமுயற்சித்தபோதும் தொடர்புகொள்ளமுடியவில்லை.
0 facebook-blogger:
கருத்துரையிடுக