கல்முனை - சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீட்டின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று ஞாயிறு அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். 

தங்க வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகப் பிரமுகர் ஒருவரின் வீட்டிலேயே இத்தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.