மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகிலிவெட்டை - சந்திவெளி வாவிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணியொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தோணி திருட்டுப் போனமை தொடர்பில் அதன் உரிமையாளர் தம்மிடம் முறைப்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வாவியில் சகதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோணியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், இச்சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக