கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அரசடி மருத்துவ பீடத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு நகர் வரை சென்று மீண்டும் மருத்துவபீடத்தை சென்றடைந்துள்ளது.
ஸ்ரீலங்காவில் நிறுவியுள்ள தனியார் மருத்துவ கல்லூரியை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டக்காரார்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மாணவர்கள் மும்மொழிகளிலுமான பதாதைகளை ஏந்தியிருந்துடன் அதிகமான மாணவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 facebook-blogger:
கருத்துரையிடுக