அம்பாறை சவளைக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவுகள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக சவளைக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
அதிகாலை ஆலயத்திற்கு வழிபடச் சென்றவர்கள், ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தினுள் இருந்த உண்டியல் வெளியில் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உண்டியலில் இருந்த பணம் மற்றும் பக்தர்களினால் நேர்த்திக்கடனுக்காக ஆலயத்திற்கு வழங்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுடன் ஒலிபெருக்கி உபகரணம் ஒன்றும் திருடர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளைக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக