புதன், 6 ஜனவரி, 2016

திறமைக்கு வறுமை தடையில்லை

வர்த்தக துறையில் 3 A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ள ம.அன்ரன்

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகாவித்தியாலயத்தில் 2015ம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தகப்பிரிவில் 3 பாடங்களிலும் “A” சித்திகளைப் பெற்று மாவட்டரீதியில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளார் மாணிக்கராசா அன்ரன்.

திருகோணமலை சனீஸ்வரன் ஆலயத்திற்கு முன்னால் சிட்டிகளை விற்று தமது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் வறுமையான குடும்பத்தில் பிறந்து சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கும் இவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பல சமயங்களில் இத்தொழிலில் பெற்றோருக்கு உதவியாக இவரும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate