கணிதப்பிரிவில் பொறியியல் பீடத்திற்கு 6 மாணவிகளும் மருத்துவ பீடத்திற்கு 11 மாணவிகளும் வர்த்தக பிரிவிற்கு 9 மாணவிகளும் கலைப்பிரிவில் சட்டத்துறைக்கு 2மாணவிகளும் தெரிவுசெய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளனர்
இம்மாணவிகளை அதிபர் பிரதி அதிபர் உயர்தரம் கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்தியதுடன் இம் மாணவிகள் அவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்ததுபோல் பல்கலைக் கழகத்திலும் பாடசாலையின் பெயருக்கு பெருமையை சேர்க்க வேண்டுமெனவும் அதிபர் மாணவிகளுக்கு தெரிவித்தார்.
பொறியியல்பீடத்தில் முதல்நிலை பெற்ற மாணவி கௌரிகாந்தன்-.நிஷங்கனியும் சட்டத்துறையில் முதல்நிலை பெற்ற மாணவி அபிராமி-யுவராஜன் அவர்களும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக